Sunday 23 February 2014

சிவன் ராத்திரி

சிவராத்திரி அல்லது சிவபெருமானின் இரவு என்பது புகழ்பெற்ற ஒரு இந்து பண்டிகையாகும். இதனை ஒவ்வொரு வருடமும், இந்து ஆண்டுக் குறிப்பேட்டின் படி, மாசி மாதத்தின் 13 ஆம் தேதி இரவு அல்லது 14 ஆம் தேதி இது கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து, சிவபெருமனை புகழ்ந்து மந்திரங்களும் ஸ்லோகங்களும் படிப்பார்கள். பகல் மற்றும் இரவு முழுவதும் பலர் விரதம் இருக்கவும் செய்வார்கள். சிவலிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் வில்வ இலைகளை படைத்த பின்னரே காலை உணவை உட்கொள்வார்கள். சிவராத்திரி பண்டிகை பெண்களுக்காக விசேஷ முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. திருமணமாகாத பெண்கள், சிவபெருமானை போலவே நல்ல கணவன் அமைய அவரை வணங்குவார்கள். திருமணமான பெண்கள், தங்கள் கணவரும் குடும்பமும் நல்ல படியாக சீரும் சிறப்புமாக இருக்க வணங்குவார்கள்.
சமுத்ர மந்தன் புராணம் : நீலகண்டா கதை தான் அனைத்தையும் விட புகழ் பெற்ற புராணமாக விளங்குகிறது. பாற்கடலை கடைந்ததன் விளைவாக உருவான நஞ்சை, இந்நாளில் சிவபெருமான் உட்கொண்டதால் தான் மகாசிவராத்திரி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதாக நம்பப்படுகிறது. அந்த கொடிய நஞ்சு அவரின் தொண்டை குழியில் தேங்கியதால், அவரை நீலகண்டர் அல்லது ஊதா நிறத் தொண்டையை கொண்ட தெய்வம் என்று அழைக்கிறார்கள்.
சிவபெருமானுக்கு விருப்பமான தினம் பங்குனி மாதம் 14-ஆம் நாள் என்பது சிவபெருமானின் விருப்பமான தினம் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே இத்திருவிழா இந்நாளில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் புராணத்தின் படி, மகாசிவராத்திரியின் போது தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்று அவர் ஒரு குடும்பஸ்தராக மாறினார்.   
சிவராத்திரியின் முக்கியத்துவம்: மகா சிவராத்திரியின் போது, சிவபெருமான் மனித இனத்திற்கு மிகவும் அருகாமையில் வருவார் என்று நம்பப்படுகிறது. நடுநிசியில், இறைத்தன்மையும், நேர்மறையான அதிர்வும் மனித இதயத்திற்கு அருகில் கிட்டும். அதனால் தான் சிவராத்திரியின் போது அனைவரும் விழித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment