Sunday 21 July 2013




சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும்!!!)


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

_சுட்டதேதான் (தமிழ் facebook)

Friday 5 July 2013

ஜாதீ...

உரிமை...சாதி அழிய ஒரு வழிதான் இருக்கிறது. அந்தந்த சாதீய கட்சிகளின், சங்கங்களின் தலைவர்கள் அந்தந்த சாதீயத்தை சேர்ந்த புரட்சியாளர்களால் களையெடுக்கப்பட வேண்டும்.

புரட்சி பேசும் பகுத்தறிவாளர்கள் இதற்கு தயாராவார்களா?

நாம் தான் நம் சாதித்தலைவனையோ, மதத்தலைவனையோ விமர்சிக்கவும், எதிர்க்கவும் இது வரை தயாரானதில்லையே. போங்கடா உளுத்தம்பருப்புகளா?

இங்கு தங்களை அதிமேதாவிகளாகவும், புரட்சியாளர்களாகவும், சாதி மறுப்பாளர்களாகவும் காட்டிக்கொள்ள பதிவுகள் இடும் எவனுக்கும் (நான் உட்பட) திவ்யா, இளவரசன் பற்றி பேசிக்கொள்ள அருகதை இல்லை.
     ---- யாரோ எழுதியது .

Wednesday 3 July 2013

எது நீங்க...?

கதை
முட்டாளுக்கு மூணு வழி என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ஆரம்பத்தில் அதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஒரு பெரியவரிடம் கேட்ட போது அவர் அதற்கு விளக்கம் சொன்னார். அதாவது, ஒருவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான் . போகிற வழியில் தரையில் கிடந்த சானத்தையோ எதையோ மிதித்து விடுகிறான். அவன் புத்திசாலியாக இருந்திருந்தால் வழியில் கவனமாக இருந்து அதை மிதிக்காமல் தவிர்த்திருப்பான். அல்லது மிதித்தபின் ஒரு கல்லிலேயோ அல்லது தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்திருப்பான். ஆனால் முட்டாள் அப்படிச் செய்ய மாட்டன். முதலில் தான் மிதித்தது சானம்தானா எனத் தொட்டுப் பார்ப்பான். பின் அதை மூக்கின் அருகில் கொண்டு வந்து மோர்ந்து பார்ப்பான். அதை மேலும் உறுதி செய்ய, அதை நக்கி வேறு பார்ப்பான்.. ஆரம்பதிலேயே சுதாரித்திருந்தால் காலில் பட்டது காலோடு போயிருக்கும்.. காலில் பட்டது விரலில் பட்டு, மூக்கில் பட்டு , கடைசி நாக்கிலும் பட்டு..... ...     யாரோ எழுதி எப்போதோ படித்தது......